காகத்தின் தனி சிறப்பு
காகத்தின் தனி சிறப்பு
காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு என்பார்கள், அதுபோல காக்கை நமது வீட்டின் முன் வந்து காகா, காகா, என்று கூவினால் நம் வீட்டிற்கு யாரோ விருந்தினர் வருகை தர போகிறார்கள் என்று சொல்லுவார்கள்.
மேலும் சனிதோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமையில் அதிகாலையில் நீராடி சனிபகவானை வணங்கி காகத்திற்கு எள்ளுசாதம் வைத்தால் மலைபோல் நின்ற தோஷம் பனிபோல் விலகும் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது. அதுபோல அமாவாசையின் போது அமாவாசை நாளில் தங்களது தாய் அல்லது தந்தையர்களை இழந்தவர்கள் தங்களது தாய் தந்தை நினைவாக காகாத்திற்கு சாப்பாடு உருண்டை வைப்பதும் வழக்கமாகவே இருந்து வருகிறது.
மேலும் பறவைகளில் காகத்தினை ஒற்றுமைக்கு அடையாளமாக சொல்லலாம், காரணம் எங்கே ஒரு சிறிய உணவு கிடைத்தாலும் அதனை தான் மட்டும் உண்ணாமல் சக காகங்களையும் கா கா கா என்று கானம்பாடி அழைத்து விருந்தோம்பலுக்கும் எடுத்துகாட்டாக விளக்குகின்றது காகம் என்று சொன்னால் அது மிகையாகாது.
பொதுவாக காகத்தின் கழுத்து பகுதி சாம்பல் நிறமாகவும் மற்ற பகுதிகள் கருமை நிறமாகவும் இருக்கும் அதுபோல காகத்தின் தனி சிறப்பு வாய்ந்தாக சொல்லப்படுவது அண்டங்காக்காய் இதனை சாதரணமாக எல்லா இடங்களிளும் பார்க்க இயலாது குறிப்பாக 5 முதல் 50 வரையிலான காகங்கள் ஒற்றுமையாகி கூடும் இடங்களில் நிச்சயமாக 1 அல்லது 2 அண்டக்காக்காய்கள் இருக்கும் அதன் நிறம் மற்ற காகங்கள் போல் இல்லாமல் முற்றிலுமாக கருப்பு நிறமாக இருக்கும் இதுவே மற்ற அனைத்து காகங்களையும் வழி நடத்துகின்ற தலைமை வகிப்பது போன்று தோன்றும் இப்படி காத்தின் நற்குணங்களைப் பற்றியும் பெருமைகளைப் பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம்.
குறிச்சொற்கள்: