செவ்வந்தி பூ
செவ்வந்தி பூ
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வந்தா கண்டிப்பா எல்லாப் பக்கமும் சும்மா பளிச்சுனு இந்த செவ்வந்தி பூ கடை போட்டிருப்பாங்க இதில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் இந்தப் பூ கிடைக்கும். நாமும் அந்த பூவ வாங்கி சாமிக்கு போட்டு பூஜை பண்ணுவோம். ஆனா அதோட பூர்வீகம் என்ன அதனோட குணங்கள் என்னனு யோசிச்சது இல்லேல்ல….
செவ்வந்திப்பூக்கு மற்றொரு பேரா க்ரூசாந்தேமம் (Bhrysanthemem) இருந்திருக்கு. இந்த வார்த்தை கிரேக்க வார்த்தையில இருந்து வந்ததா சொல்றாங்க. இந்த பூக்கள் பல நிறங்களில் இருக்கின்றன.
மஞ்சள் மற்றும் வெள்ளை நமக்குத் தெரிந்தவை. இது போக சிவப்பு, ஆரஞ்சு என பல கலர்ல இருக்காம். இத முக்கியமா ஜப்பான், சீனாவுல தான் வளர்த்து பயன்படுத்தறாங்க. அவங்க இத மன்னரோட சின்னமாவும், துக்கத்தோட வெளிப்பாடாவும் நினைக்கிறாங்க.
ஜப்பானுல இத மகிழ்ச்சியான புனித சின்னமா பார்க்கறாங்க. ஊருக்கு ஊரு ஒரே பொருள் வெவ்வேறு விதமா பார்க்கப்படுது. இந்த பூக்களுக்குனு பல மருத்துவ குணம் இருக்கு. முக்கியமா இதிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு ரசாயனம் சிறந்த கொசு மற்றும் பூச்சி கொல்லியா பயன்படுது.
ஆனா இதுல இருக்குற ரசாயனம் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தறதில்ல. அது மட்டும் இல்ல. இது பயோ டீ கிரேட்புல் (அதாங்க இயற்கையா மட்கும் பொருள்). அதனால சுற்றுசூழல் பாதிப்பு சுத்தமா கிடையாது. கொஞ்சம் பேரு இதனோட இதழ்கள காய வெச்சு டீ தயாரிச்சு சாப்பிடறாங்களாம்
குறிச்சொற்கள்: