சப்தஸ்வரங்களான ச,ரி,க,ம,ப,த,நி சொல்லும் இசைத் தூண்கள்
சப்தஸ்வரங்களான ச,ரி,க,ம,ப,த,நி சொல்லும் இசைத் தூண்கள்
- கோயிலில் உள்ள தூண்கள் இசை எழுப்பும் வண்ணம் அமைப்பது தமிழர் இசை கட்டுமான நுட்பகலைப் பரிமாணங்களில் ஒன்று சென்னையில் உள்ள யானை கோயிலில் உள்ள இசைத் தூண்கள் நல்ல எடுத்துக்காட்டு மிடறு என்று அழைக்கப்படும் கற்தூண்கள் இசை என்ற தமிழிசை மரபின் எடுத்துக்காட்டாக இவற்றைக் கொள்ளலாம்.
- பண்டைய காலத்தில் இவ்வாறான தூண்கள் செதுக்கப்படும் போதே ச,ரி,க,ம,ப,த,நி என்ற ஏழு விதமான இசையை எழுப்பும் விதத்தில் இத்தூண்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
- நாயக்கர்கள் காலத்துக்குப் பின்பாகத்தான் (1780 முதல் 1790) இசைத் தூண்கள் காணக் கிடைக்கின்றன. சுசீந்திரம் கோயிலில் குணசேகர மண்டபம் என்று முன்னால் அழைக்கப்பட்டு தற்போது அலங்கார மண்டபம் என்று அழைக்கப்படும் இடத்தில் இசைத் தூண்கள் அமைந்துள்ளன.
- மண்டபத்தில் வடக்குப் பகுதியில் 2 தொகுதித் தூண்களும் தெற்குப் பகுதியில் 2 தொகுதித் தூண்களும் அமைந்துள்ளன. இசைத் தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர்.
- இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தஸ்வரங்கலான ச,ரி,க,ம,ப,த,நி என்ற தனித் தனி ராகங்களை அது இசைக்கின்றது. சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது.
- இதில் பெரிய தூணில் கர்நாடக சங்கீதமும், அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக் கருவிகளின், இசையை தருகின்றது.
- அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும், ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால்தான் இப்படி இது வேறு, வேறு ஒலிகளில் இசைக்கும். இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை.
- உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள், இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையைவிட மிக துல்லியமாக இது இசைக்கின்றது என்கிறார்கள்.
- சரி இது எதற்காக பயன்பட்டது? அந்தக் காலத்தில் இருந்த இசைக் கலைஞர்கள் கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல் இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர்.
- இது போன்று உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது. இந்த இசைத் தூண்களை மிடறு என்று அழைத்தார்கள். இது எப்படி வேலை செய்கின்றது.
- ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வொரு விதமான அலைக்கற்றையை உருவாக்குகின்றது. எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது.
- இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி விஞ்ஞானி (கல்பாக்கம்) திரு, அனிஷ்குமார் என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள இயற்பியல் அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர்.
- தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவு செய்து அளவிடுவது. “In Situ metallooraphy” ( used to find out in-service, dearadation of crtical comoonents of process plants operating under high temperature/high pressure/corrosive atmosphere) (ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை) என்ற புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் என தெரிய வந்தது.
- “Spectral analysis” என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது, தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றையினால் சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றனது.
- சப்தம் உருவாவதே ஒரு அதிசயமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது. இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை. ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நூழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரத்தைக் கூட உருவாக்கவில்லை.
- இதைப்பற்றிய ஆராய்ச்சிக்கு இந்த இசைத்தூண்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாக தந்து கொண்டிருக்கின்றது. இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாக்கவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும் கலாச்சாரத்தையும் கட்டிக் காப்போம்.
குறிச்சொற்கள்:
இந்த இடுகையை பற்றிய தங்கள் கருத்து
{{feedMsg}}
மேலும் சில கட்டுரைகளைப் படிக்கவும்