ஆடு, மாடு, கோழி பன்றிகளை குளிர்காலத்தில் பராமரிக்கும் முறைகள்
ஆடு, மாடு, கோழி பன்றிகளை குளிர்காலத்தில் பராமரிக்கும் முறைகள்
ஆடு, மாடு, கோழிப்பண்ணைகளை குளிர்காலத்தில் பராமரிப்பது அவசியம். மாட்டுப்பண்ணையில் மழைநீர் தேங்காமல் வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கறவை மாடுகள் மழையில் நனைந்தாலோ சேறு சகதியான தரையில் படுத்தாலோ பால் உற்பத்தி குறைந்து விடும்.
பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த நீரில் பசுக்களின் மடியை கழுவ வேண்டும். சாக்கு பை அல்லது உலர்ந்த வைக்கோலால் படுக்கை அமைத்து கன்றுகளுக்கு குளிரை குறைக்க வேண்டும்.
மழை பெய்யும் காலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. தழைகள், உலர்கம்பு, சோளத்தட்டைகளை தீவனமாக கொடுக்கலாம். ஈரமான சகதியான தரையில் ஆடுகள் மேயும்போது அவற்றின் கால் குளம்புகளில் புண் ஏற்படும். ஆட்டு கொட்டகையை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டால் கொசு பெருக்கத்தால் ஏற்படும் நீலநாக்கு நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றலாம்.
கோழிப்பண்ணையில் ஈரம் இன்றி காத்தால் கழிச்சல் நோயிலிருந்து பாதுகாக்கலாம். கோழி தீவனத்தில் ஈரம் படக்கூடாது. ஈர தீவனங்களை உண்ணும் கோழிகளுக்கு பூஞ்சாண நோய் ஏற்படும்.
குறிச்சொற்கள்: