அரிசி, பருப்பு, நெய் என மளிகை பொருட்களில் வண்டு, புழு வச்சு வீணா போகுதா? இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க
அரிசி, பருப்பு, நெய் என மளிகை பொருட்களில் வண்டு, புழு வச்சு வீணா போகுதா? இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க
அடிக்கடி கடைக்கு சென்று வர முடியாத காரணத்தால் பலரும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி வைத்துவிடுகின்றனர். ஆனால் அவை சில நாட்களிலேயே வண்டு பிடிப்பது , புழு பிடிப்பது என பயன்படுத்த முடியாமல் போகிறது. இதனால் பணமும் வீணாகிறது. பொருளும் வீணாகிறது. எனவே இதை சரி செய்ய நீங்கள் சில சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே போதுமானது.
இப்போதைய சூழலில் அடிக்கடி கடைக்கு சென்று வர முடியாத காரணத்தால் பலரும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி வைத்துவிடுகின்றனர். ஆனால் அவை சில நாட்களிலேயே வண்டு பிடிப்பது , புழு பிடிப்பது என பயன்படுத்த முடியாமல் போகிறது.
இதனால் பணமும் வீணாகிறது. பொருளும் வீணாகிறது. எனவே இதை சரி செய்ய நீங்கள் சில சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே போதுமானது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
- தினமும் சமைக்கும் அரிசி அல்லது பச்சரிசி, இட்லி அரிசி , சிகப்பு அரிசி என எந்த அரியாக இருந்தாலும் அதில் வண்டு, புழு வருகிறது எனில் அதில் நான்கு அந்து பிரிஞ்சு இலைகளை போட்டு வையுங்கள். அவ்வாறு போட்டால் வண்டு பிடிக்காமல் இருக்கும்.
- நெய் கெட்டுப் போகக் கூடாது அதேசமயம் அதன் மணமும் சுவையும் மாறாமல் இருக்க வேண்டும் எனில் அதில் ஒரு துண்டு வெல்லம் சேர்த்து கலந்து வையுங்கள்.
- கோதுமை மாவு, சோள மாவு, அரிசி மாவு, கடலை மாவு என ரெடிமேட் மாவு வகைகளை வாங்கி வைக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். ஆனால் அவை சில நாட்களிலேயே வண்டு வைத்துவிடும் அல்லது புழு வைத்துவிடும். அப்படி இல்லாமல் ஃபிரெஷாக நீண்ட நாட்கள் இருக்க உப்பு கொஞ்சம் கலந்து வையுங்கள்.
- பச்சை பயிறு போன்ற எப்போதாவது பயன்படுத்தக் கூடிய பயறு வகைகள், பருப்பு வகைகள் இருந்தால் அவற்றை வாணலியில் சூடேறும் பதத்தில் வறுத்து ஆற வைத்து மூடி வையுங்கள். இதனால் வண்டு பிடிக்காமல் இருக்கும்.
- புளியில் வண்டு பிடிக்கிறது எனில் அதில் கொட்டைகள் இருக்கலாம். எனவே கொட்டைகளை எடுத்துவிட்டு ஓடுகளை நீக்கி வைத்தால் வண்டு பிடிக்காது.
- அதேபோல் புளியை ஜாடியில் வைக்கும்போது ஒவ்வொரு அடுக்காக வையுங்கள். அதன் ஒவ்வொரு அடுக்கின் இடையிலும் கல் உப்பு சிறிதளவு வையுங்கள். இதனால் நீண்ட நட்களுக்கு புளி ஃபிரெஷாக இருக்கும்.
- உடைத்த கடலை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்தால் நமத்து போய்விடும். எனவே அதை வாணலியில் சூடேறும் பதத்தில் வறுத்து பின் டப்பாவில் அடைத்து வையுங்கள்.
- நீங்கள் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு மாதம் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை அரைத்து வைக்கும் பழக்கம் இருந்தால் அதில் கொஞ்சம் கல் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். இதனால் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும்.
குறிச்சொற்கள்: