பரதநாட்டியம் ருக்மணிதேவி அருண்டேல்
பரதநாட்டியம் ருக்மணிதேவி அருண்டேல்
கலாக்ஷேத்ரா என்பது இந்தியக் கலையை, குறிப்பாக பரதநாட்டியம் மற்றும் இசையைப் போற்றி வளர்க்கும் பொருட்டு 1936ல் ருக்மணிதேவி அருண்டேலினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கவின் கலைக் கல்லூரியாகும். ஒரே ஒரு மாணவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரியில் இன்று ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் உலகெங்கிலும் இருந்து இங்கு தங்கி கலை பயில்கின்றார்கள்.
அருண்டேலின் வழிகாட்டலே கலாக்ஷேத்ராவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்கியது. 1962லிருந்து கலாக்ஷேத்ரா சென்னையில் திருவான்மியூரில் புதிய வளாகத்தில் இயங்கத் தொடங்கியது.
1993ல் இந்திய நாடாளுமன்றத்தினால் கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானத்தின் படி கலாக்ஷேத்ரா இந்தியாவின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது.
நூற்றாண்டு விழா (1904 முதல் 2004) பரத நாட்டியத்திற்கு இன்று நல்ல கௌரவம் கிடைக்கிறதென்றால், அது அவருடைய புண்ணியம் தான் என்று நாட்டில் பேசுவதுண்டு. பரத நாட்டியத்திற்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தவர் அவர்.
கலைத்துறையில் 20ஆம் நூற்றாண்டில் சிறந்த பெண்மணியாக கௌரவம் பெற்றவர். அவர் வேறு யாருமல்ல ருக்மணி அருண்டேல். கலாக்ஷேத்ரா பெயரைக் கேட்டவுடனே நினைவிற்கு வரும் பெயர் ருக்மணி அருண்டேல். கலாக்ஷேத்ராவுக்கு ஒரு உருவத்தைக் கொடுத்தவர். ருக்மணி அருண்டேலையும், கலாக்ஷேத்ராவையும் தனிதனியாகப் பிரித்துப் பார்க்கமுடியாதுதான்.
கலைத்துறையில் மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும் புரட்சிகரமான பாதையில் நடந்த புரட்சிப்பெண் ருக்மணி அருண்டேல். அவர் பரதக் கலையை தன்னுடைய 30 வது வயதில் கற்றுக் கொண்டாரெண்டால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். கலைக்கு வயது ஒரு வரம்பில்லை என்பது ருக்மணி அருண்டேலின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்.
நாட்டியம் கற்றுக்கொள்ளும் விஷயத்தில் அவருடைய கணவர் ஜார்ஜ் சிட்னி அருண்டேலின் பங்கும் எவ்வளவோ இருக்கிறது. சென்னை தியோசாபிகல் சொசைட்டி முதல்வர் சிட்னி அருண்டேல், ருக்மணி அருண்டேலை விட வயதில் மூத்தவர்.
ஆச்சாரமுள்ள பிராமண குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண், அக்காலத்தில் ஒரு வெளிநாட்டுக்காரரை மணப்பதென்பது சாதாரண விஷயமல்ல. அக்காலத்தில் “தேவதாசி நாட்டியம்” என்று கருதப்பட்ட நாட்டியக் கலையை கற்றுக் கொள்வதில் அவர் அதே தைரியத்தைக் காண்பித்தார்.
இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் பரதக் கலைக்கு ஒரு கௌரவத்தைப் பெற்றுத் தந்தார். ருக்மணி அருண்டேல் பரதக் கலையைக் கற்றுக் கொள்வதற்குக் காரணம் ரஷ்யன் பாலே டான்ஸர் அன்னா பாவ்லோவா (1882 முதல் 1931).
ருக்மணி அருண்டேல் அவரிடம் பாலே நாட்டியத்தைக் கற்றுக் கொண்டிருக்கும் போது, உன் தோற்றம் பரதக் கலைக்கு மிக எடுப்பாக இருக்குமென்று ஊக்குவித்தார். அவருடைய யோசனை ருக்மணி அருண்டேலின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
கலாக்ஷேத்ரா எனும் ஒரு கலைக்கூடம் உருவாவதற்கு மூலகாரணமாய் இருந்தது. ருக்மணி தேவியின் தந்தை நீலகண்ட சாஸ்திரி மிகப்பெரிய வேதபண்டிதர். தாய் சேக்ஷம்மாள் சங்கீதக் கலைக்கு ஒரு மையமான திருவையாறைச் சேர்ந்தவர்.
தந்தை தியோசாபிகல் சொசைட்டியுடன் தொடர்புள்ளவர், ஆகையால் ருக்மணிதேவிக்கு சிறு வயதிலிருந்தே அந்த அமைப்புடன் ஒரு தொடர்பு உண்டு. 16 வயதில் சிட்னி அருண்டேலை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ருக்மணி பல நாடுகளுக்குச் சென்று வந்தார்.
அப்படித்தான் அவருக்கு ரஷ்யன் பாலே டான்ஸர் அன்னா பாவ்லோவாவுடன் நட்பு தொடங்கியது. 1993 ல் மியூசிக் அகாடமியில் பாண்டநல்லுர் சகோதரிகளின் பரத நாட்டிய நிகழச்சியை ருக்மணி தேவிக்கு பார்க்க நேர்ந்தது.
உடனே அந்தக் கலையை பாண்டநல்லுர் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் கலையை கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்தார். ஆனால், முதலில் மீனாட்சிசுந்தரம் அவருக்குக் கற்றுத்தர சம்மதிக்கவில்லை. பிறகு அவர் தன்னுடைய சம்மதத்தைத் தெரிவித்தார்.
ருக்மணி அருண்டேல் தன்னுடைய அரங்கேற்றத்தை தியோசாபிகல் சொசைட்டியில் செய்தார். அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியைக் கண்டது. அவர் உருவாக்கிய வால்மீகி ராமாயண நாட்டிய நிகழ்ச்சி பலரின் பாராட்டுகளைப் பெற்றது.
குறிச்சொற்கள்: