அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் நாட்டின் ஏழாவது முதலமைச்சராவார் இவரது இயற்பெயர் காஞ்சிபுரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai). இவர் 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 நாள் பிறந்தார்.
இவர் சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியி லும் கல்வி கற்றார். இவர் அனவராலும் அறிஞர் அண்ணா என்றே அழைக் கப்பட்டார்.
அரசியலில் காங்கிரஸ் அல்லாத திராவிடக்கட்சியை முதலில் ஆரம்பித்தவர் அண்ணாதுரை அவர்கள். அதில் பெருவாரியான வாக்குகள் பெற்று ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.
நடராச முதலியார் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர். தாய் பங்காரு அம்மாள் கோயில் பணியாளர்.
அண்ணாவின் பெற்றோர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். அண்ணா தம் சித்தி ராசாமணி அம்மாளிடம் வளர்ந்தார். மாணவப் பருவத்திலேயே ராணியம்மையாரை மணம் புரிந்தார்.
அண்ணாதுரை குடும்ப வறுமை காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிமாக நிறுத்திக் கொண்டு, நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக சிறிது காலம் பணிபுரிந்தார். இந்தியா குடியரசு நாடான பிறகு காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி நடத்தியது.
முதன் முதலில் ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக் கட்சித் தலைவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை கேலி செய்வதற்காக அவரிடம் Because என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர்.
அதற்கு அவர், “No sentence ends in because, because, because is a conjunction”. எந்தத் தொடரிலும் இறுதியில் வராச்சொல் ஏனென்றால், ஏனென்றால், ஏனென்றால் என்பது இணைப்புச்சொல் என்று உடனே பதிலளித்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாகச் சொற்பொழி வாற்றவும், எழுதவும் வல்லவர்.
இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதியிருக் கிறார். அவற்றுள் சிலவற்றை இயக்கி, சிலவற்றில் நடித்தும் இருக்கிறார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். அதன் வாயிலாக தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை முதன்முதலாக பரப்பிய பெருமை இவரையேச் சாரும்.
அவரது பாட்டி ஒருமுறை ஆங்கிலத்தில் பேசி காட்டச் சொன்னார். ஆனால் அண்ணா மறுத்து விட்டார். அவர் பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தாலும், போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணா வுக்கு உடன்பாடில்லை.
நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணா தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கினார். மெட்ராஸ் பிரசிடென்சியில் தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராகவும், பத்திரிகை ஆசிரியராகவும் வெளிப்படுத்தினார். பிறகு பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார்.
பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கை களுக்கு எதி ரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்தி ருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் ஈடுபட்டார்.
1949 ஆம் ஆண்டு பெரியாரின் தனி திராவிட நாடு கொள்கையின் காரணமாகவும், தன்னைவிட வயதில் இளையவரான மணியம்மையாரை பெரியார் மணம் புரிந்து கொண்டமையினால் கருத்துவேறுபாடு காரணமாக பெரியாரை விட்டு விலகினார்.
பின்னர்தான் திராவிட முன்னேற்றக் கழகம் (D M K) என்ற புதிய இயக்கத்தை ஆரம்பித்தார். தனிக்கட்சி துவங்கினாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகள் பெரியாரின் திரவிடக்கட்சியைபோலவே செயல்பட்டது.
இந்தியாவின் தேசிய அரசியலில் பங்குகொள்ளும் விதமாக 1963 ஆம் ஆண்டு நடந்த இந்திய சீனப் போருக்குப்பின் தனது தனித் திராவிட நாட்டுக் கொள்கையை கைவிட்டார். காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்தும், இந்தி எதிர்ப்பு போராட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டார். இதன் காரணமாக மக்களாதரவை பெற்றார்.
1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது.
ஆட்சி பொறுப்பை ஏற்றதும் கலப்புத் திருமணங்களுக்கு ஆதவளித்தார். இந்தியை வேண்டாம் என்று தமிழ் மற்றும் ஆங்கில மொழி கல்வியை கொண்டுவந்தார். மதராஸ் என்றிருந்த சென்னையை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தார்.
மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், அவரால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க முடிந்தது. அண்ணா இந்துக் குடும்பத்தில் பிறந்தவராயிருந்தாலும் அவரின் கொள்கை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தி னார்.
அறிஞர் அண்ணா அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும் அவரது கட்சியின் பண்பாடாகவும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப் பாராட்டும் தன்மை பொதுவாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு என்ற கொள்கை உடையவர்.
அவர் புகையிலையை உட்கொள்ளும் பழக்கம் உடையவராததால் 1969 ஆம் ஆண்டு புற்று நோயின் காரண மாக பிப்ரவரி மாதம் காலமானார். இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம் என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.அவரின் பெயரில் பல கல்வி நிறுவனங்கள் துவக்கப்பட்டன.
தி.மு.க - விலிருந்து பிரிந்த எம் ஜி ஆர் அவர்மீது கொண்ட பற்று காரணமாக தான் ஆரம்பித்த அரசியல் கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்தார்.
ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞரா கவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவராகவும், இன்றும் தமிழக மக்கள் மனதில் அறிஞர் அண்ணா வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
குறிச்சொற்கள்: